• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

வேளாண்மைதுறை மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் ஆய்வுக் கூட்டம் – மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

policeseithitv by policeseithitv
October 8, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
வேளாண்மைதுறை மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் ஆய்வுக் கூட்டம் – மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வேளாண்மைதுறை மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் சார்பில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அருண்ராய் தலைமையில் நடந்தது. மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் முன்னிலை வகித்தார்.

ஆய்வுக் கூட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விவசாயிகளுக்கு அறுவடையை உரிய காலத்தில் முடிக்கவும். மேலும், விவசாயிகளின் நலன் கருதி; நெல் கொள்முதல் நிலையங்களில் எளிதில் பதிவு கொண்டு நெல் விற்பனை செய்ய ஏதுவாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்து கொள்முதல் செய்ய வேண்டிய தேதியினை முன்பதிவு செய்திடவும், நெல் கொள்முதல் நிலையங்களின் பாதுகாப்பு குறித்தும் உரிய அலுவலர்களிடம் கலந்து ஆலோசிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து திருமருகல் ஊராட்சி ஒன்றியம் மேலபூதனூர் ஊராட்சி மற்றும் திருமருகல் ஊராட்சியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தும் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்படுவதையும், பாதுகாப்பாக வைக்கப்படும் இடத்தையும் பார்வையிட்டார்.
விவசாயிகளின் வயல்களில் விளைவிக்கப்படும் நெல் பயிர்களை பார்வையிட்டு விவசாயிகளிடம் கலந்துரையாடி அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்கள். வேளாண்மை பொறியியல்துறை சார்பில் உள்ள நெல் உலர்த்தும் இயந்திரத்தையும் மாவட்;ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


கீழையூர் ஒன்றியம் செருதூர் மீனவ கிராமத்தில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள பேரிடர் கால முன்னெச்சரிக்கை ஒளிப்பான் செயல்படும் விதத்தை பார்வையிட்டும், செருதூர் மற்றும் பிரதாபராமபுரத்திலும் புயல் பாதுகாப்பு மைய கட்டிடத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்து தண்ணீர், கழிவறை உள்ளிட்ட வசதிகளை சரியான முறையில் பராமரிக்குமாறு உரிய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு நுகர்வோர் முதுநிலை மண்டல மேலாளர் பாண்டியன், வேளாண்மை துறை இணை இயக்குநர் பன்னீர்செல்வம் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.

செய்தி தொகுப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா
நாகை மாவட்ட செய்தி தொகுப்பாளர்

Previous Post

தொடர் திருட்டு குற்றங்களில் ஈடுபட்ட ராம்ஜிநகரை சேர்ந்த 7 குற்றவாளிகளை கைது செய்து, 3 லேப்டாப்கள் மற்றும் ரூ.1,16,000 கைப்பற்றிய, அண்ணாநகர் உதவி ஆணையாளர் தலைமையிலான காவல் குழுவினரை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்துப் பாராட்டி வெகுமதி

Next Post

ஐந்தாவது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் – மாவட்ட ஆட்சியர் அழைப்பு

Next Post
இந்திய – இலங்கை எல்லை அருகே அல்லது எல்லையினை கடந்து மீன்பிடி தொழிலில் ஈடுபட வேண்டாம் எனமீனவர்களுக்கு நாகை மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் வேண்டுகோள்

ஐந்தாவது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் – மாவட்ட ஆட்சியர் அழைப்பு

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In