மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் கடந்த 04.10.2021-ஆம் தேதி தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு காவல் துறையின் பயன்பாட்டிற்காக “முக அடையாளம் கண்டறியும் மென்பொருளை” தொடங்கி வைத்தார்
தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநர் அவர்களின் மேலான உத்தரவின்பேரில், திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன், இ.கா.ப., மேலான அறிவுரைகளின்படி, “முக அடையாளம் கண்டறியும் மென்பொருள்” (FRS-Face Recognition Software) “துவக்க விழா இன்று 06.10.2021-ஆம் தேதி காலை 11.00 மணிக்கு, திருச்சி மாநகர காவல் ஆணையர் துவங்கப்பட்டது. பின்னர், திருச்சி மாநகர காவல் அலுவலகத்தில் உள்ள கலந்தாய்வுக் கூட்டஅரங்கத்தில், மேற்குறிப்பிட்ட முக அடையாளம் கண்டறியும் மென்பொருளை எவ்வாறு செயல்படுத்துவது என்பது பற்றி திருச்சி மாநகர காவல் நிலையங்களில் பணிபுரியும் காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் நிலைய காவல் ஆளிநர்களுக்கு விளக்கமாக எடுத்துக்கூறி திருச்சி மாநகர காவல் ஆணையர் பேசினார்

