• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

குமரி அருகே படகு பழுதாகி நடுக்கடலில் தத்தளித்த 9பேர் மீட்பு

policeseithitv by policeseithitv
October 6, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
குமரி அருகே படகு பழுதாகி நடுக்கடலில் தத்தளித்த 9பேர் மீட்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவுக்கு பொருட்களை கொண்டு செல்லும் போது, குமரி அருகே படகு பழுதாகி நடுக்கடலில் தத்தளித்த 9பேர் மீட்கப்பட்டனர்.
தூத்துக்குடியில் இருந்து கடந்த 2ம் தேதி அன்னை வேளாங்கண்ணி ஆரோக்கிய வென்னிலா என்ற படகில் பொருட்களை ஏற்றிக்கொண்டு ஒன்பது மீனவர்கள் மாலத்தீவை நோக்கி சென்றுள்ளனர். அவர்கள் கன்னியாகுமரியில் இருந்து சுமார் 130 நாட்டிகல் மைல் தூரத்தில் இருந்தபோது திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக படகு மூழ்கும் சூழல் உருவாகியிருக்கிறது. உடனடியாக அப்படகில் இருந்த அவசரநிலை தொலைத்தொடர்பு சாதனம் மூலம் நேற்றிரவு ‘சென்னை கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு’ தகவல்  தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து அந்தப் படகின் உரிமையாளர் செல்வராஜ் மற்றும் அதில் பயணித்த 9பேரின் குடும்பத்தினர் தரப்பில் இருந்து கனிமொழி கருணாநிதி எம்பிக்கு நேற்று இரவில் தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்போது டெல்லியில் இருந்த அவர் உடனடியாக மத்திய அமைச்சகத்தை தொடர்புகொண்டு மீட்பு நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளார். இதைத் தொடர்ந்து இரவோடு இரவாக மீட்புப் பணிகள் நடைபெற்றது. மாலத்தீவை நோக்கி சென்று கொண்டிருந்த கப்பல் ஒன்று தூத்துக்குடி மீனவர்கள் சென்ற படகிற்கு சற்று தூரத்தில் இருப்பதைக் கண்டறிந்து அக்கப்பலுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தற்போது அந்த 9 மீனவர்களும் காப்பாற்றப்பட்டு மாலத்தீவில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். விரைவில் அவர்கள் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். போர்க்கால அடிப்படையில் மீட்பு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஒன்பது தூத்துக்குடி மீனவர்களை காப்பாற்ற முயற்சியெடுத்த கனிமொழி கருணாநிதி எம்பி., அவர்களுக்கு அவர்கள் குடும்பத்தினர் சார்பில் விசைப்படகு சங்கத் தலைவர் வெலிங்டன் நன்றி தெரிவித்துள்ளார்.!
Previous Post

சென்னை பெருநகர காவல் உதவி மையத்தில் Help Age India அரசு சாரா முதியோர் நல அமைப்பினருக்கு ரூபாய் 4.5 லட்சத்துக்கான காசோலை

Next Post

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது

Next Post
குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவில் சூரசம்ஹார நிகழ்ச்சியை கடற்கரையில் நடத்தக் கோரிய வழக்கில், மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க வேண்டுமென உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In