தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் பிறந்தநாள் விழா தூத்துக்குடியில் சமத்துவ மக்கள் கழகம் சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டது
தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் தூத்துக்குடி தேவர்புரம் ரோட்டில் அமைந்துள்ள மாவட்ட தலைமை அலுவலகத்தில் வைத்து ஆதித்தனார் அவர்களது உருவப்படத்திற்கு மாவட்ட செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் தலைமையில் மாநில தொழிற்சங்க செயலாளர் ஜெபராஜ்டேவிட் மாநில கலை இலக்கிய அணிச் செயலாளர் வழக்கறிஞர் அந்தோணிபிச்சை ஆகியோர் மலர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

இவ்விழாவில் மாவட்ட அவைத்தலைவர் கண்டிவேல் பொதுக்குழு உறுப்பினர் ஜோசப் இளைஞரணி செயலாளர் டேனியல்ராஜ் தொண்டரணி செயலாளர் முத்துச்செல்வம் தொழிலாளர் அணிச்செயலாளர் சதாசிவம் வர்த்தகர் அணி செயலாளர் சிவசு முத்துக்குமார் விவசாய அணி செயலாளர் சரவணன் மாநகரச் செயலாளர் உதயசூரியன் மாநகர அவைத் தலைவர் மதியழகன் மாநகர துணை செயலாளர் மணிகண்டன் விளாத்திகுளம் ஒன்றிய செயலாளர் பொன்னுத்துரை மற்றும் மங்களம் பைனான்ஸ் மேலாளர் செல்வராஜன் உள்பட பலர் கலந்துகொண்டு மலர் தூவி வாழ்த்து கோஷங்கள் எழுப்பினார்கள்.

