வேதாரண்யம் மீனவருக்கு அரிவாள் வெட்டு
வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுத்துறை சேர்ந்த சின்னதம்பி சிவா சிவக்குமார் ஆகிய 3 பேர் நேற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது இலங்கை மீனவர்கள் படகை சூழ்ந்துகொண்டு சிவகுமார் என்ற மீனவரை தலையில் அரிவாளால் வெட்டியதில் பலத்த காயமடைந்து வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும் சின்னதம்பி, சிவா ஆகிய இரண்டு மீனவர்களை கட்டையால் தாக்கியதில் காயமடைந்த அவர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

படகில் இருந்த 400 கிலோ விலை மற்றும் ஜிபிஎஸ் கருவிகளை பறித்துக்கொண்டு ஆறுகாட்டுத்துறை மீனவர்களை இலங்கை மீனவர்கள் விரட்டியடித்தனர்.
செய்தி தொகுப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா
நாகை மாவட்ட செய்தி தொகுப்பாளர்

