• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் சின்னத்தால் தமிழகத்தில் உள்ள முக்கிய துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை

policeseithitv by policeseithitv
September 25, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் சின்னத்தால் தமிழகத்தில் உள்ள முக்கிய துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி நாளை கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு குலாப் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த குலாப் பெயரை பாகிஸ்தான் பரிந்துரை செய்துள்ளது. வங்கக்கடலில் நேற்று உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது ஆழ்ந்த தாழ்வு மண்டலமாக வலுபெற்றுள்ளது.
இந்நிலையில் இந்த தாழ்வு மண்டலம் அடுத்த 6 மணிநேரத்தில் புயலாக மாறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்ககடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ளது. இந்த புயல் நாளை மாலை தெற்கு ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திராவில் உள்ள கலிங்கப்பட்டினத்தில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஆந்திரா, ஒடிசா மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் சின்னத்தால் தமிழகத்தில் உள்ள முக்கிய துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதன்படி சென்னை எண்ணூர், காட்டுப்பள்ளி, கடலூர், நாகை, காரைக்கால், புதுச்சேரி, தூத்துக்குடி, பாம்பன் ஆகிய துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. கடல் காற்று பலமாக வீசக்கூடும் என்பதால் குமரி கடல், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே இன்று தமிழகத்தின் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, கரூர், கள்ளக்குறிச்சி, திருச்சி, சேலம், திருவண்ணாமலை ஆகிய 9 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Previous Post

அடுத்த ஒரு மாதத்திற்குள் அனைவரும் தாமாக முன்வந்து முழுமையாக கொரோனா தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள வேண்டும். – தமிழக சுகாதாரத்துறை செயலாளர் இராதாகிருஷ்ணன்

Next Post

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று ஒரே நாள் இரவில் 28 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 11 அரிவாள், போன்ற கூர்மையான ஆயுதங்கள் பறிமுதல்

Next Post
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று ஒரே நாள் இரவில் 28 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 11 அரிவாள், போன்ற கூர்மையான ஆயுதங்கள் பறிமுதல்

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று ஒரே நாள் இரவில் 28 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 11 அரிவாள், போன்ற கூர்மையான ஆயுதங்கள் பறிமுதல்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In