• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

நாகர்கோவிலில் டாக்டர் வீட்டில் 33 பவுன் நகை, ரூ.3¼ லட்சம் பணம் திருட்டு

policeseithitv by policeseithitv
September 25, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
முறைகேடாக நகைக்கடன் பெற்றவர்களிடம் இருந்து பணத்தை திருப்பி வசூலிக்க அனைத்து மண்டல பதிவாளர்களுக்கும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுற்றறிக்கை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
நாகர்கோவிலில் டாக்டர் வீட்டில் 33 பவுன் நகை, ரூ.3¼ லட்சம் பணம் திருட்டுபோன சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நாகர்கோவில் பார்வதிபுரம் சானல்கரை பகுதியை சேர்ந்தவர் ஆபிரகாம் ஜோயல் ஜேம்ஸ் (68). நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வரும் இவர், ஆசாரிபள்ளம் காவல் நிலையத்தில் புகார் மனுவில்: எனது வீட்டில் உள்ள நகைகள் மற்றும் பணம் ஆகியவற்றை வீட்டில் உள்ள ஒரு இரும்பு லாக்கரில் பாதுகாப்பாக வைத்திருந்தேன். கடந்த சில நாட்களுக்கு முன்பு லாக்கர் சாவி காணாமல் போனது.
எனது வீட்டில் உள்ளவர்களிடம் விசாரித்தேன். இருப்பினும் சாவி கிடைக்கவில்லை. இதையடுத்து லாக்கரை, நம்பர் லாக் மூலம் திறக்க முடிவு செய்தேன். ஆனால் நம்பர் லாக் செய்த ரகசிய எண் மறந்துவிட்டது. அந்த ரகசிய எண்ணை ஒரு நோட்டு புத்தகத்தில் எழுதி வைத்திருந்தேன். அதை பார்த்து லாக்கரை நம்பர் லாக் மூலம் திறந்து பார்த்தேன். அப்போது அதில் இருந்த 33 பவுன் நகைகள் மற்றும் ரூ.3¼ லட்சம் பணம் ஆகியவற்றை காணவில்லை. அவற்றை யாரோ மர்ம நபர்கள் திருடி விட்டு, மீண்டும் லாக்கரை பூட்டி சென்றுள்ளனர்.
இந்த திருட்டில் ஈடுபட்டவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் திருட்டுபோன பணம் மற்றும் நகைகளை மீட்டு தரவேண்டும் என புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் ஆசாரிபள்ளம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு பல்வேறு இடங்களில் பதிவான ரேகைகளையும் பதிவு செய்தனர். தொடர்ந்து டாக்டரின் வீட்டிற்கு சமீபத்தில் யார்? யார்? எல்லாம் வந்தார்கள் என்ற விவரங்களை சேகரித்து வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Previous Post

தூத்துக்குடியில் தூய்மைப் பணிகளை அமைச்சர் கீதாஜீவன், கனிமொழி எம்பி ஆகியோர் துவக்கி வைத்தனர்.

Next Post

செங்கல் சூளை வைத்திருப்போர், மண்பாண்ட தொழில் செய்வோர் அனுமதியின்றி மண் எடுக்கலாம் – தமிழக அரசு அறிவிப்பு

Next Post
செங்கல் சூளை வைத்திருப்போர், மண்பாண்ட தொழில் செய்வோர் அனுமதியின்றி மண் எடுக்கலாம்  – தமிழக அரசு அறிவிப்பு

செங்கல் சூளை வைத்திருப்போர், மண்பாண்ட தொழில் செய்வோர் அனுமதியின்றி மண் எடுக்கலாம் - தமிழக அரசு அறிவிப்பு

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In