சாலை சீரமைக்க கோரி நாகை மாவட்ட ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் சங்கத்தினர் மனு
நாகப்பட்டினம் மாவட்டத்தின் தலைநகராகவும், பல முக்கிய அலுவலகங்கள் அமைந்துள்ள பகுதியாக விளங்குகிறது. ஆனால் நாகப்பட்டினம் பால்பண்ணைச் சேரியிலிருந்து சாமாந்தன்பேட்டை வரையில் சாலையில் பல இடங்கள் சேதமடைந்துள்ளது. இதனால் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு வருகை தரும் ஆயிரக்கணக்கானோர் மற்றும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பாதிக்கப்படுகின்றனர்.
பால்பண்ணைச்சேரி முதல் சாமந்தான்பேட்டை கடற்கரை சாலை வரையிலான சாலை குறுகலாகவும், குண்டு குழியுமாக இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனம் வந்து செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே பக்தர்கள், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் நலன் கருதி சாலையை சீரமைத்து அகலப்படுத்தி சரி செய்து தர வேண்டுமென நாகை மாவட்ட ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் சங்க தலைவர் கண்ணுசாமி, துணைத் தலைவர் ஏசுநாதன், செயலாளர் ஜெயசங்கர், பொருளாளர் சரவணன் ஆகியோர் நகராட்சி ஆணையரிடம் மனு அளித்துள்ளனர்.
செய்தி தொகுப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா
நாகை மாவட்ட செய்தி தொகுப்பாளர்

