• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி மாவட்டத்தில் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் பொது ஏலம் விடப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அறிவித்துள்ளார்.

policeseithitv by policeseithitv
September 23, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
கொலை, கொள்ளை வழக்குகளில் சம்மந்தப்பட்ட பிரபல ரவுடிகள் 6 பேர் கைது – மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் பாராட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
தூத்துக்குடி மாவட்டத்தில் மதுவிலக்கு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் வரும் அக்டோபர் 4ம் தேதி பொது ஏலம் விடப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் மதுவிலக்கு தொடர்பாக குற்ற செயல்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் தொடர்புடைய நபர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்கள் – 35, மூன்று சக்கர வாகனம் -1, நான்கு சக்கர வாகனங்கள் – 15 என மொத்தம் 51 வாகனங்கள் தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் 1937 கைப்பற்றப்பட்ட பொருள்கள் முடிவு செய்தல் தொடர்பான திருத்தப்பட்ட சட்டம் விதிகள் 1979ன்படி பொது ஏலத்தில் விட்டு அரசுடைமையாக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேற்படி 51 வாகனங்களும் தூத்துக்குடி கோரம்பள்ளம் மாவட்ட காவல் அலுவலகம் முன்பு உள்ள மைதானத்தில் 04.10.2021 திங்கள் கிழமை அன்று காலை 10.00 மணிக்கு பொது ஏலம் நடைபெற உள்ளது. மேற்படி வாகனங்கள் தற்போது பொதுமக்கள் பார்வைக்காக மேற்படி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஏலம் விடப்பட உள்ள வாகனங்களை பொதுமக்கள் நாளை (23.09.2021) முதல் (காலை 09.00 முதல் மாலை 06.00 மணி வரை) பார்வையிட அனுமதிக்கப்படுகின்றனர். ஏலத்தில் பங்கேற்க விரும்பும் நபர்கள் ரூபாய். 1000 (ஆயிரம்) முன்பணமாக ஏலம் விடப்படும் நாளன்று காலை 09.00 மணிக்கு கட்ட வேண்டும்.
முன்பணம் செலுத்திய நபர்கள் மட்டுமே ஏலத்தில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள். மேலும் வாகனத்தை ஏலம் எடுத்தவுடன், ஏலத்தொகை மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி முழுவதையும் செலுத்தி அப்போதே வாகனத்தினை பெற்றுக் கொள்ள வேண்டும். மேலும் இது தொடர்பான விவரங்களுக்கு தூத்துக்குடி மாவட்ட தலைமையிட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அலுவலக தொலைபேசி எண்: 0461 2341391 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
Previous Post

ஆயுதப்படை பெண் காவலர்களுக்கான புத்தாக்க பயிற்சி – சென்னை பெருநகர காவல் ஆணையாளர் துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

Next Post

பல்வேறு மக்கள் நல பணிக்காக தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி ரூ.58.21 லட்சம் நிதியுதவி

Next Post
பல்வேறு மக்கள் நல பணிக்காக தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி ரூ.58.21 லட்சம் நிதியுதவி

பல்வேறு மக்கள் நல பணிக்காக தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி ரூ.58.21 லட்சம் நிதியுதவி

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In