ரபி பருவத்தில் நெல் பயிர்களுக்கான திருந்திய பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டம் – பதிவு செய்து பயனடைய நாகை மாவட்ட ஆட்சியர் விவசாயிகளுக்கு வேண்டுகோள்
பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் இழப்புகளிலிருந்து பாதுகாக்கவும், பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும் மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்கள் கடைபிடிப்பதை ஊக்குவிக்கவும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டு (2021-22) ரபி பருவத்தில் சாகுபடி செய்யப்படும் நெற்பயிர்க்கு காப்பீடு செய்ய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் நடப்பாண்டு இத்திட்டம் இப்கோ டோக்கியோ ஜென்ரல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் காப்பீட்டு நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் விவசாயிகள் அங்கீகரிக்கப்பட்ட பொது சேவை மையங்கள், வணிக வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாக காப்பீட்டு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இத்திட்டத்தில் பதிவு செய்ய கடைசி நாள் 15.11.2021 எனவும் ஒரு ஹெக்டேருக்கான பிரீமியத் தொகை ரூ.1236.73 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே விவசாயிகள் இறுதி நேரம் வரை காத்திருந்து ஏற்படும் சிரமங்களை தவிர்க்கவும். விவசாயிகளின் விண்ணப்பங்கள் விடுபடாமல் இருக்கவும் பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் காப்பீட்டுத் தொகையினை செலுத்தி முன் கூட்டியே பதிவு செய்யுமாறு மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.
செய்தி தொகுப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா
நாகை மாவட்ட செய்தி தொகுப்பாளர்
