நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுத்துறைச் சேர்ந்தவர் அருள்செல்வன். இவருக்கு சொந்தமான படகில் அருள்ராஜ் ராமச்சந்திரன், மரியதாஸ் நல்லத்தம்பி உட்பட நான்கு பேர் கடலுக்குள் மீன்பிடிக்க நேற்று 17ம் தேதி மதியம் சென்றனர். இவர்கள் நேற்றிரவு ஆறுகாட்டுத்துறை கடற்கரையிலிருந்து 15 மைல் கல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது இலங்கையைச் சேர்ந்த 5 படகுகளில் வந்த 25க்கும் மேற்பட்ட மீனவர்கள் இவர்களது படகை சுற்றி வளைத்தனர். பின்பு படகில் இருந்தவர்களை கத்தியை காட்டி மிரட்டி ஆறுகாட்டுத்துறை பகுதி மீனவர்களிடமிருந்த 3 லட்சம் மதிப்புள்ள வலைகள், ஜிபிஎஸ் கருவி, வாக்கி டாக்கி, டார்ச் உள்ளிட்ட பொருட்களை பறித்து கொண்டு விரட்டி அடித்துள்ளனர்.


இந்நிலையில் சாதனங்களை பறிகொடுத்த இன்று காலை கரை திரும்பிய மீனவர்கள் கடலோர காவல் குழும போலீசார் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர்.
செய்தி தொகுப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா
நாகை மாவட்ட செய்தி தொகுப்பாளர்

