இன்று விளாத்திகுளம் உட்கோட்டம் மசார்பட்டி காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட ராசாப்பட்டி பள்ளியில் பயிலும் கிராம மாணவ மாணவியர்களுக்கு விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு. பிரகாஷ் அவர்கள் இலவச நோட்டு புத்தகம் வழங்கினார்கள்.
மாசார்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ராசாபட்டி மற்றும் செங்கோட்டை கிராமத்தில் உள்ள ஏழை எளிய மாணவர்கள் பள்ளி செல்வதற்கு நோட்டு புத்தகம் தேவைப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயக்குமார் அவர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ் அவர்கள் ரூபாய் 10,000/- மதிப்புள்ள இலவச நோட்டு புத்தகங்களை கிராமப்புற மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில் வாழங்கினார்கள்.

