வேதாரண்யம் அருகே நெய்விளக்கு கிராமத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு
புடவை பரிசு – மனிதநேயமிக்க ஆசிரியை வசந்தா சித்திரவேலு வழங்கினார்.
ஊராட்சி மன்றத் தலைவர் கவிதா தர்மராஜன் மற்றும் பொதுமக்கள் மக்கள் பலரும் ஆசிரியரை பாராட்டினர்
_______________
செப்,13
வேதாரண்யம் அடுத்த அண்டர்காடு சுந்தரேச விலாஸ் உதவி தொடக்கப்பள்ளியின் ஆசிரியர் வசந்தா. இவர் வசந்தம் அறக்கட்டளையின் நிர்வாகியாகவும் உள்ளார். இவர் பள்ளி மாணவர்களுக்கு மட்டுமின்றி ஏழை எளியோர்கள்¸ ரோட்டோரம் வசிப்பவர்கள்¸ மனநலம் குன்றியவர்கள்¸ தாய்¸ தந்தையர் இழந்தவர்களுக்கு பல உதவிகள் செய்து வருகிறார். மேலும் கொரோனா ஊரடங்கின் போது ரோட்டோரம் வசிக்கும் சுமார் 200 நபர்களுக்கு தினசரி உணவு வழங்கி வருகிறார்.

இந்நிலையில் இன்று நடந்த சிறப்பு கொரோனா
தடுப்பூசி முகாமில் அனைவரும்
தடுப்பூசி
போடுவதை ஊக்குவிக்கும் வகையில் சுமார் 350 மகளிர்களுக்கு புடவை பரிசு வழங்கினார். இவரது செயலை ஊராட்சி மன்றத் தலைவர் கவிதா தர்மராஜன் மற்றும் ஊராட்சி உறுப்பினர்கள்¸ பொதுமக்கள் பலரும் ஆசிரியரின் மனிதநேயமிக்க இந்த செயலை பாராட்டினர்.
ஆசிரியர் என்ற மகத்தான பணியில் ஈடுபட்டுக் கொண்டு மனித நேயத்தோடு ஏழை எளிய மக்களுக்கு தொடர்ந்து உதவி செய்து வரும் மனிதநேயர் வசந்தா சித்திரவேலு மற்றொரு மணிமகுடமாக தமிழக அரசின் நேரடி கவனத்தில் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்காக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகளே அரசு முன்நின்று ஏற்படுத்தி வரும் நிலையில் அரசுடன் இணைந்து மக்கள் நன்மைக்காக தனது சொந்த பணத்தில் ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் பொதுமக்கள் பயன் பெற வேண்டுமென இந்த சிறப்பு கொரானா தடுப்பூசி முகாமில் கலந்துகொண்டு தடுப்பூசி போட்டவர்களுக்கு புடவை கொடுத்து நெய்விளக்கு கிராமப் பகுதி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய ஆசிரியைக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன போலீஸ் செய்தி இணைய தொலைக்காட்சி குழுமம் சார்பிலும் ஆசிரியைக்கு ராயல் சல்யூட்
ஆசிரியர் என்ற மகத்தான பணியில் ஈடுபட்டுக் கொண்டு மனித நேயத்தோடு ஏழை எளிய மக்களுக்கு தொடர்ந்து உதவி செய்து வரும் மனிதநேயர் வசந்தா சித்திரவேலு மற்றொரு மணிமகுடமாக தமிழக அரசின் நேரடி கவனத்தில் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்காக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகளே அரசு முன்நின்று ஏற்படுத்தி வரும் நிலையில் அரசுடன் இணைந்து மக்கள் நன்மைக்காக தனது சொந்த பணத்தில் ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் பொதுமக்கள் பயன் பெற வேண்டுமென இந்த சிறப்பு கொரானா தடுப்பூசி முகாமில் கலந்துகொண்டு தடுப்பூசி போட்டவர்களுக்கு புடவை கொடுத்து நெய்விளக்கு கிராமப் பகுதி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய ஆசிரியைக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன போலீஸ் செய்தி இணைய தொலைக்காட்சி குழுமம் சார்பிலும் ஆசிரியைக்கு ராயல் சல்யூட் செய்தி தொகுப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா
நாகை மாவட்ட செய்தி தொகுப்பாளர்

