எஸ் பி பட்டிணம் ஊராட்சியில் 4 இடங்களில் மெகா கொரோனா தடுப்பு ஊசி முகாம்!!ஒரே நாளில் 400 அதிகமான மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்

கொரோனா தடுப்பூசி கட்டாயம் அனைவரும் செலுத்த வேண்டுமென அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வரும் நிலையில் தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது ராமநாதபுரம் மாவட்டம் எஸ்பி பட்டினம் ஊராட்சி கிராமப் பகுதி என்பதால் போதிய விழிப்புணர்வு இல்லாததால் முதலில் கொரோனா தடுப்பூசி போடுபவர்கள் எண்ணிக்கை குறைவாக காணப்பட்டது .விழிப்புணர்வு தேவை என்பதை அறிந்து எஸ்பி பட்டினம் ஊராட்சி மன்ற தலைவர் சுலைஹாபீவி மற்றும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சகுபர் சாதிக் ஊராட்சி செயலாளர் மார்கண்டேயன் ஆகியோர் அந்த பகுதிகளில் வீடு வீடாக சென்று கொரானா தடுப்பூசி போடுவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள் அந்தப் பகுதியில் 100 சதவீதம் தடுப்பூசி போடும் திட்டத்தை அமல்படுத்தும் வகையில் இந்த விழிப்புணர்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது அந்த அடிப்படையில் இன்று 12/09/2021 மெகா கொரோனா தடுப்பு ஊசி முகாம் SP பட்டிணம் ஊராட்சியில் 4 இடங்களில் நடைபெற்றது. அதில்சுமார் 400 க்கு அதிகமான மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்
கிராம மக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டுக் கொண்டனர் .என்பது குறிப்பிடத்தக்கது
இந்த முகாமின் போது ஊராட்சிதலைவர் சுலைஹாபீவி முன்னாள் ஊராட்சிதலைவர் சகுபர்சாதிக் ஒன்றிய பெருந்தலைவர் ப.முகம்மதுமுக்தார் உதவி செயற்பொறியாளர் கல்யாண சுந்தரம் வட்டாரவளர்ச்சி அலுவலர்(கிஊ) சேவுகபெருமாள் துனைவட்டார வளர்ச்சிஅலுவலர் அருள்முடியப்பதாஸ்
மற்றும் ஊராட்சி செயலர் மார்கண்டேயன் உடன் இருந்தனர்

எஸ்பி பட்டணம் ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் அதிகாரிகள் வீடு வீடாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது தொடர்ந்து முகாம் அமைத்து தடுப்பூசி போடும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து வரும் எஸ்பி பட்டினம் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சகுபர் சாதிக் ஊராட்சி செயலாளர் மற்றும் அதிகாரிகள் ஊழியர்களுக்கு எஸ்பி பட்டினம் அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்

