மீனவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி பொருட்களை இலங்கை மீனவர்கள் பறித்துச் சென்றனர வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுத்துறையில் இருந்து கடலுக்குள் மீன்பிடிக்க ஏராளமான படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர் . இந்நிலையில் ஆறுகாட்டுத்துறை பகுதியைச் சேர்ந்த சங்கர் , சிவக்குமார் ஆகிய இரண்டு பேருக்கு சொந்தமான படகில் இருந்த மீன்பிடி வலைகள் , டீசல் , ஜிபிஎஸ் கருவி , வாக்கிடாக்கி உள்ளிட்ட பொருட்களை இலங்கை மீனவர்கள் கத்தியை காட்டி மிரட்டி பறித்துக்கொண்டு ஆறுகாட்டுத்துறை பகுதி மீனவர்களை விரட்டியடித்தனர் . இது வேதாரண்யம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது .
செய்தி தொகுப்பு: லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தி தொகுப்பாளர்

