• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

சாத்தான்குளம் கொலை வழக்கில் கைதான 5 போலீசார் இரவோடு இரவாக அதிரடியாக மதுரை சிறைக்கு மாற்றம் செய்ததன் பின்னணி என்ன? தூத்துக்குடியில் பரபரப்பு

policeseithitv by policeseithitv
July 4, 2020
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
சாத்தான்குளத்தில் தந்தை,மகன் உயிரிழந்த சம்பவம் 6 பேர் மீது சிபிசிஐடி போலீசார் கொலை வழக்கு பதிவு  எஸ்.ஐ. ரகுகணேஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.  .  எஸ். ஐ  பாலகிருஷ்ணன் தலைமறைவு கைது செய்ய சி பி சி ஐ டி நடவடிக்கை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

சாத்தான்குளம் கொலை வழக்கில் கைதான 5 போலீசார் இரவோடு இரவாக அதிரடியாக மதுரை சிறைக்கு மாற்றம் செய்ததன் பின்னணி என்ன? தூத்துக்குடியில் பரபரப்பு

தூத்துக்குடி: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைதான இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 5 பேர் தூத்துக்குடியில் இருந்து மதுரை சிறைக்கு திடீரென மாற்றப்பட்டனர்.  சாத்தான்குளம் வியாபாரிகள் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் கொலை வழக்கு தொடர்பாக இன்ஸ்பெக்டர் தர், எஸ்ஐகள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், ஏட்டு முருகன், காவலர் முத்துராஜ் ஆகிய 5 பேரும் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி தூத்துக்குடி பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டனர். நேற்று மாலை வரையில் அவர்கள் பேரூரணி சிறையில் இருந்தனர்.இந்நிலையில் அவர்கள் 5 பேரும் பாதுகாப்பு காரணங்களுக்காக நேற்று மதுரை மத்திய சிறைக்கு அதிரடியாக மாற்றப்பட்டனர். இதற்காக நேற்று மாலை 5.30 மணியளவில் ரூரல் டிஎஸ்பி பொன்னரசு, முறப்பநாடு இன்ஸ்பெக்டர் பார்த்திபன் ஆகியோரது தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவர்கள் 5 பேரும் அழைத்து செல்லப்பட்டனர். இரவில் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.தற்போது இதுதொடர்பான வழக்கு விசாரணை மதுரை ஐகோர்ட்டில் நடந்து வருவதாலும், மதுரை சிபிசிஐடி கோர்ட்டில் கொலை வழக்கு விசாரணை நடக்க இருப்பதாலும், அதற்கு வசதியாகவும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும் அவர்கள் மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டுள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.இதனிடையே இன்ஸ்பெக்டர் உட்பட 5 பேரையும் காவலில் எடுக்க நாளை கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்படலாம் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.சாத்தான்குளம் கொலை வழக்கில் கைதான 5 போலீசார் இரவோடு இரவாக அதிரடியாக மதுரை சிறைக்கு மாற்றம்  செய்தது தூத்துக்குடியில் பரபரப்பு  ஏற்பட்டது 

செய்தி தொகுப்பு 
ஆத்திமுத்து

Previous Post

சாத்தான்குளத்தில் தந்தை,மகன் உயிரிழந்த சம்பவம் சிபிசிஐடி போலீசார் கொலை வழக்கு பதிவு காவல் ஆய்வாளர், 2 உதவி ஆய்வாளர், தலைமை காவலர் உட்பட 4 பேரை சிறையில் அடைத்தனர்

Next Post

சாத்தான்குளம் சம்பவம் -பென்னிக்ஸ் நண்பர்கள் 5-பேர் சிபிசிஐடி போலீசார் முன்னிலையில் ஆஜராகி உள்ளனர்

Next Post
சாத்தான்குளத்தில் தந்தை,மகன் உயிரிழந்த சம்பவம் சிபிசிஐடி போலீசார் கொலை வழக்கு பதிவு  காவல் ஆய்வாளர், 2 உதவி ஆய்வாளர், தலைமை காவலர்  உட்பட 4 பேரை சிறையில் அடைத்தனர்

சாத்தான்குளம் சம்பவம் -பென்னிக்ஸ் நண்பர்கள் 5-பேர் சிபிசிஐடி போலீசார் முன்னிலையில் ஆஜராகி உள்ளனர்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In