வேதாரண்யம் அடுத்த வாய்மேடு பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையான தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தை தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று 30.08.2021 காலை காணொளி வாயிலாக திறந்து வைத்தார்.
வேதாரண்யம் – திருத்துறைப்பூண்டி பேருந்து மார்க்கத்தில் வாய்மேடு கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சுற்றி ஏராளமான விவசாய நிலங்களும், கூரை வீடுகளும் உள்ளது. இங்கு தீ விபத்து ஏற்பட்டலோ அல்லது விஷ வண்டுகள், கால்நடைகள் நீரில் மூழ்கினாலோ 20 கிலோ மீட்டா் தொலைவில் உள்ள வேதாரண்யம் அல்லது 15 கிலோ மீட்டா் தொலைவில் உள்ள திருத்துறைப்பூண்டி பகுதியில் இருந்து தீயணைப்பு துறையினா் வந்து சேர வேண்டிய நிலை இருந்து வந்தது. இதையடுத்து பொதுமக்கள் நீண்ட காலமாக இங்கு தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை பரிசீலித்த அரசு இங்கு தீயணைப்பு நிலையம் அமைக்க உத்தரவிட்ட அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனா்.

வாய்மேடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தை மாவட்ட காவல் கண்காணிபாளர் ஜவஹர் குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தார். திமுக நாகை தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளா் கௌதமன், வேதாரண்யம் நகர செயலாளா் புகழேந்தி, திமுக ஒன்றிய செயலாளர்கள் வேதாரண்யம் சதாசிவம் தலைஞாயிறு மகாகுமார் உட்பட அரசு அதிகாரிகளும், கழக நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.
செய்தி தொகுப்பு: நாகை மாவட்ட செய்தியாளர்
டாக்டர் ஜா.எல்விஸ் லாய் மச்சோடா


