தூத்துக்குடி சிப்காட் நிறுவனத்திற்கு நில எடுப்பு செய்யும் பணிகளை மேற்கொள்ள ஓய்வு பெற்ற நில அளவர் மற்றும் வரைவாளர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் சிப்காட் நிறுவனத்திற்கு நில எடுப்பு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. மேற்படி நில எடுப்பு பணிகளை மேற்கொள்ள நில அளவர் மற்றும் வரைவாளர் பணியிடங்களை ஓய்வு பெற்ற நில அளவர் மற்றும் வரைவாளர் மூலம் நிரப்பப்படவுள்ளது.
எனவே மேற்படி பணியிடத்தில் சேர விருப்பமுள்ள, வருவாய்த்துறை மற்றம் நில அளவைத்துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற நில அளவர் மற்றும் வரைவாளர்கள் 10.09.2021 அன்று மாலைக்குள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் தெரிவித்துள்ளார்.

