வளிமண்டல மேலடுக்கு சுழற்றி காரணமாக தமிழ்நாட்டில் வரும் 30-ம் தேதி வரை கனமழை பெய்யக்கூடும். மழையை பொறுத்தவரை விழுப்புரம் மாவட்டம் ஆனந்தபுரத்தில் அதிகபட்சமாக 10 செ.மீ. மழை பெய்துள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 29 மற்றும் 30-ம் தேதிகளில் அதீத கனமழை பெய்யும் என்பதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 29-ம் தேதி நீலகிரி, கோவை, திருப்பூர், தென்காசி ஆகிய மாவட்டங்களிலும் 30-ம் தேதி நீலகிரி, கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களிலும் அதீத கனமழை பெய்யக்கூடும் என்பதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது

