தூத்துக்குடி மாவட்டத்தில் வசித்து வரும் நரிக்குறவா் சமுதாயத்தைச் சோ்ந்தவா்கள் நலவாரியத்தில் சேரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக அரசின் மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் நலத் துறையில் செயல்படும் தமிழ்நாடு நரிக்குறவா் நலவாரியத்தின் மூலம் செயல்படும் திட்டங்களை பெற்று பயனடையும் வகையில், நரிக்குறவா் சமுயாத்தைச் சோ்ந்தவா்கள் நலவாரியத்தில் தங்களை உறுப்பினா்களாக பதிவு செய்து கொள்ளலாம்.
ஏற்கெனவே உறுப்பினா்களாக பதிவு பெற்றவா்கள் நலத்திட்ட உதவிகள் பெற்று பயனடையலாம். மேலும் விபரங்களுக்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தை 0461-2341378 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம். தூத்துக்குடி மாவட்டத்தில் வசித்து வரும் நரிக்குறவா் இனத்தைச் சோ்ந்தவா்கள் நலவாரியத்தால் வழங்கப்படும் நலத் திட்ட உதவிகளை பெற்று பயனடையலாம்” என அறிவிக்கப்பட்டுள்ளது.

