• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

சேலம் மாநகரில் ஒரு கோடியே 35 லட்சம் மதிப்புள்ள குட்கா, புகையிலை பொருட்கள் பறிமுதல்

policeseithitv by policeseithitv
July 31, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
சேலம் மாநகரில் ஒரு கோடியே 35 லட்சம் மதிப்புள்ள  குட்கா, புகையிலை பொருட்கள் பறிமுதல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

சேலம் மாநகரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் மற்றும் லாட்டரி சீட்டுகள் விற்பனையை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு சேலம் மாநகர காவல் ஆணையாளர் நஜ்முல் ஹோதா,இ.கா.ப., உத்தரவின் பேரில் சேலம் மாநகர சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் துணை ஆணையாளர் மோகன்ராஜ் மற்றும் சேலம் மாநகர குற்றம் மற்றும் போக்குவரத்து காவல் துணை ஆணையாளர் வேதரத்தினம் ஆகியோர்களின் மேற்பார்வையில் சேலம் மாநகர தெற்கு சரக சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் உதவி ஆணையாளர் வெங்கடேசன் தலைமையில் அன்னதானப்பட்டி காவல் ஆய்வாளர் ரமேஷ், காவல் உதவி ஆய்வாளர் ஜான் கென்னடி , சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள் சரவணன்,செல்லப்பன் மற்றும் காவலர்கள் வெங்கடேசன்,செந்தில்குமார் தங்கதுரை, சீனிவாசன் ஆகியோர்கள் 29.07.2021ஆம் தேதி சேலம் மாநகரம் அன்னதானப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சீலநாயக்கன்பட்டி ஊத்துக்காட்டில் உள்ள PSM லாரி ஸ்டாண்டில் சந்தேகத்திற்கிடமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு லாரிகளை சோதனை செய்ததில் சுமார் ஒரு கோடி மதிப்புள்ள 7300 கிலோ எடையுள்ள 248 மூட்டைகள் குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதேபோல் நேற்று அதிகாலை சுமார் 5 மணி அளவில் சேலம் உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கணேஷ் கல்லூரி அருகில் ஒரு சரக்கு லாரியிலிருந்து பொலிரோ வாகனத்திற்கு சரக்கு மூட்டைகளை மாற்றிக் கொண்டிருந்த போது அவ்வழியாக ரோந்து சென்று கொண்டிருந்த சேலம் மாநகரம் வடக்கு சரக சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் உதவி ஆணையாளர் ஆனந்தகுமார் மற்றும் அவரது ஓட்டுநர் தலைமை காவலர் முனிகுட்டி, அம்மாபேட்டை காவல் நிலைய ரோந்து வாகன பொறுப்பு சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் நந்தகுமார் மற்றும் வாகன ஓட்டுநர் தலைமை காவலர் பாண்டியன் ஆகியோர்கள் சந்தேகத்தின் பேரில் மேற்படி வாகனங்களை சோதனை செய்த பொழுது அதில் சுமார் ரூ.35 லட்சம் மதிப்புள்ள 2397 கிலோ எடையுள்ள 72 மூட்டைகள் குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேற்படி ஒரு கோடியே 35 லட்சம் மதிப்புள்ள குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் மற்றும் நான்கு வாகனங்களை பறிமுதல் செய்து தங்களது பணிகளை சிறப்பாக செய்த காவல்துறையினரை சேலம் மாநகர காவல் ஆணையாளர் வெகுவாக பாராட்டினார்.

Previous Post

அமைப்பு சாரா தொழிலாளர்கள் நலவாரிய உறுப்பினர்கள் 3004 பேருக்கு ரூ.34.58 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் பெ.கீதாஜீவன் வழங்கினார்.

Next Post

குறைந்த வாடகையில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் – தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் அறிவிப்பு

Next Post
நெல் விற்பனை செய்துவிட்டு பணம் கிடைக்காமல்  கண்ணீர் சிந்தும் தூத்துக்குடி விவசாயிகள்.. துயர் துடைப்பாரா, மாவட்ட ஆட்சியர்?

குறைந்த வாடகையில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் - தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் அறிவிப்பு

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In