நசரத்பேட்டை பகுதியில் கஞ்சா விற்பனை செய்த வடமாநில வாலிபர்கள் இருவரை கைது செய்த தலைமைக்காவலர் சீனிவாசன் என்பவரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.
நசரத்பேட்டை காவல் நிலைய தலைமைக்காவலர் .சீனிவாசன் (த.கா.35312) என்பவர் 1.7.2021 அன்று காலை நசரத்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாப்பான் சத்திரம், பெங்களுர் தேசிய நெடுஞ்சாலை, சிவன் கோயில் அருகே ரோந்து சென்று கொண்டிருந்த போது, அங்கு இருசக்கர வாகனத்துடன் நின்று கொண்டிருந்த 2 நபர்களை பிடித்து விசாரணை செய்து, அவர்களை சோதனை செய்து, சட்டவிரோதமாக, கஞ்சா மறைத்து வைத்திருந்த 1.தேவேந்திர நாத்கொகோய், , (வ/31) அஸ்ஸாம் மாநிலம் 2.அன்டார்யாமி மஹாலிக், (வ/23) ஓடிசா மாநிலம் ஆகிய இருவரை யும் கைது செய்து நசரத்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அவர்களிடமிருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சா, ரொக்கம் ரூ.1,24,320/-, 3 செல்போன்கள் மற்றும் 1 இருசக்கர வாகனம் கைப்பற்றப்பட்டது. மேலும் மேற்படி குற்றவாளிகள் மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
மேற்படி ரோந்து பணியின் போது விழிப்புடன் செயல்பட்டு கஞ்சா விற்பனை செய்த 2 வெளிமாநில குற்றவாளிகளை கைது செய்த T-16 நசரத்பேட்டை காவல்நிலைய தலைமைக்காவலர் சீனிவாசனை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.

