தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநர் திரிபாதி, இ.கா.ப நேற்று (30.6.2021) பணி ஓய்வு பெறுவதையொட்டி, எழும்பூர் இராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற பிரிவு உபச்சார விழாவில் கலந்து கொண்டு, காவல் துறை சார்பில் அளிக்கப்பட்ட சிறப்பு கவாத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். காவல் துறை கூடுதல் இயக்குநர் (நிர்வாகம்) ரவி, இ.கா.ப பணி ஓய்வு பெற்ற காவல் துறை தலைமை இயக்குநர் திரிபாதி, இ.கா.ப நினைவு பரிசு வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் காவல் துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு, இ.கா.ப, காவல் துறை இயக்குநர்கள் கரண்சின்கா, இ.கா.ப, (Fire & Rescue) ஷகில் அக்தர், இ.கா.ப, (CBCID), கந்தசாமி, இ.கா.ப, (V&AC) சுனில்குமார் சிங், இ.கா.ப, (Prison) ரவி, இ.கா.ப (EB Vigilance), சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப, உயர் காவல் அதிகாரிகள் மற்றும் பணி ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


