திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஏற்பாட்டின்பேரில் காவலர் நலன் கருதி மாவட்ட காவல்துறை மற்றும் தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை (தனியார்) இணைந்து மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் இன்று(30.06.21) காவலர் நல சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.
மருத்துவ முகாமை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் துவங்கி வைத்து உடல்நலம்,மனபலம், ஆரோக்கியமான வாழ்க்கை முறை ஆகியவை குறித்து காவலர்களுக்கும், காவலர் குடும்பங்களுக்கும் அறிவுறுத்தினார்கள்.
மேலும் இந்நிகழ்ச்சியில் உடலியல் இயக்கம் குறித்தும், மாரடைப்பு போன்ற நேரங்களில் உடனடியாக செய்யவேண்டியவை குறித்தும் மருத்துவர்கள் விளக்கம் அளித்தார்கள்.
முகாமில் மாவட்ட ஆயுதப்படையைச் சேர்ந்த காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் சுமார் 150 பேர் பங்குபெற்று பயன்பெற்றனர்.
மேலும் இரத்த அழுத்தம் சர்க்கரை நோய், கண் பார்வை பிரச்சினை போன்ற குறைபாடு கண்டறியப்பட்ட காவலர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையில் தொடர் சிகிச்சைகள் பெற மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
ஏற்பாடு செய்துள்ளார்

