நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலின் போது தூத்துக்குடியில் ஆர்வத்துடனும், சேவை மனப்பான்மையுடனும் போக்குவரத்து சீர்செய்யும் பணியில் கலந்து கொண்டு சிறப்பாக பணியாற்றிய சாலை பாதுகாப்பு படை (Road Safety Patrol) மாணவர்கள் 18 பேருக்கு, அவர்களது சேவையை பாராட்டி மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.
தமிழக சட்டமன்ற தேர்தலின்போது போலீசார் அனைவரும் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அந்நேரத்தில் காவல்துறைக்கு உதவியாக தூத்துக்குடியில் உள்ள போக்குவரத்து சந்திப்புகளில் சாலை பாதுகாப்பு படையில் தன்னார்வலர்களாக உள்ள மாணவர்கள் போக்குவரத்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டு சிறப்பாக பணியாற்றினர். அவ்வாறு சிறப்பாக பணியாற்றிய மாணவர்கள் கமலேஷ்குமார், பாக்கிய பிரவீன், பாலகுமார், செல்வம், லட்சுமணன், ஆதிமனோ, ஷேக் அப்துல் ரகுமான், குரு ஆகாஷ், பாலமுருகன், கோகுல கிருஷ்ணன், பால முருகேசன், நரேந்திரன், கார்த்திக் ராகுல், மைக்கேல் ஜான் பிரிட்டோ உட்பட 18 பேருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
இந்நிகழ்வின் போது மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து, தேசிய விருது பெற்ற மாவட்ட தலைமை போக்குவரத்து காப்பாளர் ஜட்சன் உட்பட காவல்துறையினர் பலர் உடனிருந்தனர்.

