• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தமிழகத்தில் 19 ஏ.டி.எம்.களில் கொள்ளை – முக்கிய குற்றவாளி ஒருவர் அரியானாவில் கைது

policeseithitv by policeseithitv
June 23, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தமிழகத்தில் 19 ஏ.டி.எம்.களில் கொள்ளை – முக்கிய குற்றவாளி ஒருவர் அரியானாவில் கைது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
தமிழகத்தில் சென்னை உள்பட 19 ஏ.டி.எம்.களில் கொள்ளை தொடர்பாக முக்கிய குற்றவாளி ஒருவர் அரியானாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 3 நாட்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பாரத ஸ்டேட் வங்கியின் ஏ.டி.எம். மையங்களில், பணம் போடும் எந்திரங்கள் வாயிலாக நூதன முறையில் பணம் திருட்டு நடந்துள்ளது. தமிழகம் முழுவதும் இது தொடர்பாக 19 புகார்கள் வந்துள்ளன. சாதாரண வங்கி அட்டையை பயன்படுத்தி பணம் போடும் எந்திரத்தில் பலமுறை பணத்தை எடுத்துள்ளனர். ஆனால் பணத்தை எடுத்த தகவல் வங்கிக்கு தெரியாதபடி நூதன முறையை கையாண்டு இந்த திருட்டு சம்பவங்கள் நடந்துள்ளன.
பாரத ஸ்டேட் வங்கிக்கு ரூ.48 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது. வங்கி வாடிக்கையாளர்களுக்கு இதனால் இழப்பு ஏற்படவில்லை. சென்னையில் கடந்த 17-ம் தேதி, 18-ம் தேதி மற்றும் 19-ம் தேதி ஆகிய 3 நாட்களில் இந்த சம்பவங்கள் நடந்துள்ளன.  இது தொடர்பாக சென்னையில் 7 புகார்கள் வந்துள்ளன.4 கொள்ளையர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் சென்னை பெரியமேடு ஏடிஎம்மில் அதேபோன்ற நூதனமான முறையில் ரூபாய் 16 லட்சம் கொள்ளை அடிப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து காவல்துறையில் பெரியமேடு எஸ்பிஐ கிளையின் மேலாளர் புகார் அளித்துள்ளார்.
இந்த புகார் குறித்து எஸ்.பி.ஐ வங்கி ஏடிஎம் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட ஒருவரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  மேலும் 3 பேர் கொண்ட கொள்ளை கும்பலுக்கு போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இதற்காக தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடடைபெற்று வந்தது. இந்த நிலையில் அரியானா மேவாக்கில் குற்றாவாளிகள் அதிகம் இருக்கும் பகுதியில்  வங்கி கொள்ளை தொடர்பாக முக்கிய நபரை போலீசார் கைது செய்து உள்ளனர்.
மேலும் 3 பேர் கொண்ட கொள்ளை கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே எஸ்.பி.ஐ ஏடிஎம் கொள்ளை வழக்கு, மத்திய குற்றப்பிரிவு வங்கி மோசடி பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. அனைத்து எஸ்.பி.ஐ வங்கிகளிலும் பணம் சரியாக உள்ளதா என சோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Previous Post

பணியின் போது உடல்நலகுறைவால் உயிரிழந்த போலீசாரின் குடும்பத்திற்க்கு ரூ 20,லட்சம் நிதியுதவி

Next Post

மாற்றுத்திறனாளிகள், மனவளர்ச்சி குன்றிய பெண்களுக்கு சிறப்பு கரோனா தடுப்பூசி போடும் பணியினை கனிமொழி எம்பி துவக்கி வைத்தார்

Next Post
மாற்றுத்திறனாளிகள், மனவளர்ச்சி குன்றிய பெண்களுக்கு சிறப்பு கரோனா தடுப்பூசி போடும் பணியினை கனிமொழி எம்பி துவக்கி வைத்தார்

மாற்றுத்திறனாளிகள், மனவளர்ச்சி குன்றிய பெண்களுக்கு சிறப்பு கரோனா தடுப்பூசி போடும் பணியினை கனிமொழி எம்பி துவக்கி வைத்தார்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In