சிறப்புகல்வி உதவித்தொகை இரண்டாவது தவணையாக ஒவ்வொருவருக்கும் தலா ரூபாய் 25ஆயிரம் ரூபாய் காவல் உதவி ஆய்வாளர் சிவக்குமார், சிறப்பு உதவி ஆய்வாளர் தனபால், காவல் கண்காணிப்பாளர் அலுவலக உதவியாளர் குமார் ஆகியோரின் குழந்தைகளுக்கு தமிழ்நாடு காவலர் சேமநல நிதியில் இருந்து வழங்கப்பட்டது. மேலும் 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற அரசு பொதுத் தேர்வில் 10 மற்றும் 12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு ஒவ்வொருவருக்கும் தலா ரூபாய் 4,500 காவல் உதவி ஆய்வாளர் திரு.செல்வராஜ், பெண் தலைமைக் காவலர் பரமேஸ்வரி, முதல்நிலைக் காவலர் முனியம்மாள், மற்றும் பெண் தலைமைக் காவலர் அனிதா ஆகியோரின் குழந்தைகளுக்கு மாவட்டகாவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் ஐபிஎஸ்., வழங்கினார் இந்த நிகழ்ச்சியில் மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு காவல்துறை கண்காணிப்பாளர் விஜயராகவன் மற்றும் தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் செந்தில்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.