தூத்துக்குடி மாவட்டத்தில் தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் தற்பொழுது பணிபுரியும் சிறந்த சமூக சேவகர் மற்றும் சிறந்த சேவை நிறுவனத்திற்கு கௌரவிக்கும் பொருட்டு சுதந்திர தின விழா விருதுகள் வழங்க தகுதியுடையவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னையில் தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் நடைபெறும் சுதந்திரதின விழாவில் 2021ஆம் ஆண்டிற்கான பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவைபுரிந்த தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் தற்பொழுது பணிபுரியும் சிறந்த சமூக சேவகர் மற்றும் சிறந்த சேவை நிறுவனத்திற்கு கௌரவிக்கும் பொருட்டு சுதந்திர தின விழா விருதுகள் வழங்க ஆணை பெறப்பட்டுள்ளது. கீழ்க்கண்ட தகுதியுடையவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தமிழ்நாட்டை பிறப்பிடமாகக் கொண்டவராகவும், தூத்துக்குடி மாவட்டத்தை சார்ந்த 18 வயதிற்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும். குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சமூகநலன் சார்ந்த நடவடிக்கைகள் பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கை மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து மகளிர் நலனுக்கு தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணியாற்றும் சிறந்த சமூக சேவை நிறுவனம் மற்றும் சிறந்த சமூக சேவராக இருத்தல். சமூக சேவை நிறுவனம் அரசுஅங்கீகாரம் பெற்றநிறுவனமாக இருத்தல் வேண்டும்.
விண்ணப்பதாரர் பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறப்பாக சேவை புரிந்த விபரம் 1 பக்கஅளவில் தமிழ் (வானவில் அவ்வையார்) மற்றும் ஆங்கிலத்தில் (Arial) (Soft Copy and Hard Copy) அனுப்ப வேண்டும். விண்ணப்பதாரரின் கருத்துரு (Booklet -2) (தமிழ்-1 மற்றும் ஆங்கிலம்-1) மற்றும் பாஸ்போர்ட் சைஸ் போட்டோவுடன் இவ்வலுவலகத்திற்கு வந்துசேர வேண்டிய கடைசிநாள் 25.06.2021 தகுதியுடையவர்கள் மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம், கோரம்பள்ளம், தூத்துக்குடி-628101. Ph: 0461-2325606 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

