தாமிரபரணி ஆற்றில் மணல்களை அள்ளுவதற்கு மதுரை உயர் நீதிமன்ற தடை ஆணை பிறப்பித்துள்ளது. இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி தாமிரபரணி ஆற்றில் ஆற்றுமணல்களை சட்டத்திற்கு முரணான வகையில் எடுத்து மூட்டையில் வைத்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இது சம்பந்தமாக ஆழ்வார்திருநகரி காவல்துறை தொடர்ந்து கண்கானித்து வருகின்றது.
இன்று ஆழ்வார்திருநகரி ஆற்றோரம் ஆற்று மணல்களை சாக்கு மூட்டைகளில் வைத்திருந்ததாக தகவலின் அடிப்படையில் ஆழ்வார்திருநகரி காவல் ஆய்வாளர் ஜூடி அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்த போது ஆற்றுமணல்களை சுமார் 25
சாக்குகளில் இருந்தது தெரிய வந்தது. உடனே காவல் ஆய்வாளர் உத்தரவின் பேரில் உடன் இருந்த ஏட்டு துரைப்பாண்டி அவர்கள் சாக்குகளில் இருந்த ஆற்றுமணல்கள் தாமிரபரணி ஆற்றில் கொட்டி பின்னர் சாக்குகளை தீயிலிட்டு
கொழுத்தினார். இந்த விசயத்தில் யாரெல்லாம் சம்பந்தப்பட்டுள்ளனர் என ஆழ்வார் திருநகரி காவல் ஆய்வாளர் ஜூடி விசாரணை நடத்தி வருகின்றார்

