• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

குலசேகரன்பட்டினம் பகுதியில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணிகள் விரைந்து நடைபெறும் – மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ்

policeseithitv by policeseithitv
June 11, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
குலசேகரன்பட்டினம் பகுதியில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணிகள் விரைந்து நடைபெறும் – மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
குலசேகரன்பட்டினம் பகுதியில் நிலம் ஒப்படைப்பு செய்தவுடன் இஸ்ரோ மூலம் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணிகள் விரைந்து நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி ஊராட்சி ஒன்றியம் செட்டியாபத்து ஊராட்சி தாங்கையூர் பகுதியில் இஸ்ரோ நில எடுப்பில் கையகப்படுத்தப்படும் கூடல்நகர் பகுதியை சேர்ந்தவர்களுக்கு வீடுகள், சமுதாய கூடம் மற்றும் பல்வேறு வசதியுடன் கூடிய குடியிருப்புகளை அமைப்பதற்காக நிலம் தேர்வு செய்வதற்கு மாவட்ட ஆட்சியர் மரு.கி.செந்தில்ராஜ்,  இன்று (10.06.2021) கள ஆய்வு மேற்கொண்டார். பின்னர் மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் பகுதியில் இஸ்ரோ ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணிகளுக்கு நிலஎடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
மாதவன்குறிச்சி ஊராட்சி கூடல்நகர் பகுதியை சேர்ந்த 33 குடியிருப்புகள் நில எடுப்பு பகுதிக்குள் வருகிறது. அவர்களுக்கு வீடு வசதி, சாலை வசதி, குடிநீர் வசதி, சமுதாய கூடம் மற்றும் பல்வேறு வசதிகளுடன் கூடிய குடியிருப்புகள் அமைக்க தாங்கையூர் பகுதியில் இடம் இன்று பார்க்கப்பட்டது. மேலும் பல்வேறு பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்கள் பார்வையிடப்பட்டு கூடல்நகர் மக்களின் விருப்பத்திற்கு இணங்க இடம் மாற்றி அவர்களுக்கு வசதியுடன் குடியிருப்பு அமைத்து தரப்படும். இஸ்ரோ நில எடுப்பு பணிகள் தற்போது விரைவாக நடைபெற்று வருகிறது. விரைவில் நிலம் ஒப்படைப்பு செய்தவுடன் இஸ்ரோ மூலம் ஏவுதளம் அமைக்கும் பணிகள் விரைந்து நடைபெறும் என தெரிவித்தார்.
ஆய்வின்போது, இஸ்ரோ நில எடுப்பு மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜ், திருச்செந்தூர் கோட்டாட்சியர் செல்வி.தனப்ரியா, திருச்செந்தூர் வட்டாட்சியர் முருகவேல், இஸ்ரோ நில எடுப்பு வட்டாட்சியர்கள் ராஜூ, ரவிகலா, அற்புதமணி, செல்வி, நாகசுப்பிரமணியன், சிவகாமசுந்தரி, உடன்குடி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நாகராஜன், பொற்செழியன், செட்டியாபத்து ஊராட்சி தலைவர் பாலமுருகன் ஆகியோர் உடனிருந்தனர்.
Previous Post

தேர்தலில் சிறப்பாக பணியாற்றிய தனி பிரிவு காவலருக்கு மாவட்ட எஸ்.பி எஸ். ஜெயக்குமார் பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்

Next Post

விளாத்திகுளம் அருகே மகன் இறந்ததால் மனவேதனையில் இருந்து வந்த தாய் தீக்குளித்து தற்கொலை

Next Post
அதிமுக பிரமுகரின் வேன் எரிப்பு – விளாத்திகுளம் அருகே பரபரப்பு

விளாத்திகுளம் அருகே மகன் இறந்ததால் மனவேதனையில் இருந்து வந்த தாய் தீக்குளித்து தற்கொலை

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In