நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய தனிப்பிரிவு போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் ஏதும் நடைபெறாமல் வண்ணம் மாவட்ட தனிப்பிரிவு அலுவலகத்திற்கு தகவல் கொடுத்து சிறப்பாக பணியாற்றிய தனிப்பிரிவு உதவி ஆய்வாளர்கள் 8 பேர் உட்பட 58 தனிப்பிரிவு போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
இதில் தனிப்பிரிவு உதவி ஆய்வாளர்கள் தூத்துக்குடி நகரம் திரு. ஞானராஜன், தூத்துக்குடி ஊரகம் திரு. நம்பிராஜன் திருச்செந்தூர் திரு. கார்த்திகேயன், ஸ்ரீவைகுண்டம் திரு. ஜெகநாதன், மணியாச்சி திரு. முருகானந்தம், கோவில்பட்டி திரு. ஸ்டீபன், விளாத்திகுளம் திரு. சேகர், சாத்தான்குளம் திரு. கந்தசாமி உட்பட 58 தனிப்பிரிவு போலீசார் பாராட்டுச் சான்றிதழ் பெற்றனர்.
இந்த நிகழ்வின்போது மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு. பேச்சிமுத்து, தனிப்பிரிவு உதவி ஆய்வாளர்கள் திரு. கிறிஸ்டி, திரு. உமையொருபாகம் உட்பட காவல்துறையினர் உட்பட பலர் உடனிருந்தனர்.


