சேரன்மகாதேவி தாமிரபரணி ஆற்றில் பேரிடர் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
வருவாய் துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில், சேரன்மகாதேவி தாமிரபரணி ஆற்றில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, பேரிடர் ஒத்திகை மீட்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு சேரன்மகாதேவி தாசில்தார் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை நிலைய அலுவலர் வரதராஜ் மற்றும் போக்குவரத்து அலுவலர் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் வெள்ள காலங்களில் ஆற்றில் சிக்கி தவிப்பவர்களை மீட்பது குறித்த ஒத்திகை நிகழ்ச்சிகளை தீயணைப்புத்துறை வீரர்கள் செய்து காண்பித்தனர். இதில் தலைமையிடத்து துணை தாசில்தார் பிரேமா, மண்டல துணை தாசில்தார் மகாராஜன், வருவாய் ஆய்வாளர் ஜெயந்தி, வி.ஏ.ஓக்கள் பாலமுருகன், துரைபாண்டி மற்றும் வருவாய் துறையினர், தீயணைப்பு துறையினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்

