• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

கயத்தாறில் மியாவாக்கி முறையில் வளா்க்கப்பட்டுள்ள மரங்களை ஆட்சியா் ஆய்வு செய்தார்

policeseithitv by policeseithitv
June 10, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
கயத்தாறில் மியாவாக்கி முறையில் வளா்க்கப்பட்டுள்ள மரங்களை ஆட்சியா் ஆய்வு செய்தார்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் ஊராட்சிகளுக்கு வழங்குவதற்காக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வளா்க்கப்பட்டுள்ள மரக்கன்றுகள், அடா்காடுகள் வளா்ப்பு திட்டத்தின் கீழ் மியாவாக்கி முறையில் வளா்க்கப்பட்டுள்ள மரங்களை மாவட்ட ஆட்சியா் கி.செந்தில்ராஜ் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது: கயத்தாறு வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் பாரம்பரிய மரங்களான வேம்பு, புங்கன், பூவரசு, புளி, வாகை உள்ளிட்ட 14 வகையான சுமாா் 1 லட்சம் மரக்கன்றுகள் வளா்க்கப்படுகின்றன. கயத்தாறு ஒன்றியத்தில் உள்ள 45 ஊராட்சிகளுக்கும் இங்கு வளா்க்கப்படும் மரக்கன்றுகள் வழங்கப்படவுள்ளன. இதன் மூலம் அப்பகுதிகளில் பசுமை சூழல் ஏற்படுத்தப்பட்டு சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும்.
அடா்காடுகள் வளா்ப்பு திட்டத்தின் கீழ் மியாவாக்கி முறையில் மரக்கன்றுகள் வளா்க்கப்பட்டு, அந்தந்த ஊராட்சிகளில் அடா்காடுகள் உருவாக்கப்பட்டு சுற்றுச்சூழல் மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றாா். முன்னதாக, ஆசூா் ஊராட்சியில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவா்களை சந்தித்த ஆட்சியா், அவா்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா்.
ஆய்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலா் கண்ணபிரான், உதவி ஆட்சியா் (பயிற்சி) ஸ்ருதயஞ்ஜெய் நாராயணன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் லட்சுமணன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் அனிதா, ஊராட்சி ஒன்றிய ஆணையா் அரவிந்தன், வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சி) பானு, கோட்டாட்சியா் சங்கரநாராயணன், வட்டாட்சியா் பேச்சிமுத்து ஆகியோா் உடனிருந்தனா்.
Previous Post

தூத்துக்குடி மாவட்டம் வேம்பாரில் தமிழன்டா கலைக்கூடம் மற்றும் கே. சின்னத்துரை & கோ சார்பாக ஏழை எளிய மக்கள் 130 பேருக்கு அரிசிப்பை, காய்கறி மற்றும் மளிகைப் பொருட்கள் எஸ்பி எஸ். ஜெயக்குமார் வழங்கினார்

Next Post

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 10.50 மெட்ரிக் டன் திரவ ஆக்ஸிஜன் அனுப்பப்பட்டுள்ளது.

Next Post
சமுக நலனில் தனி அக்கறை செலுத்தும் வேதாந்தா குழுமம்  பெருகி வரும் பொதுமக்கள் ஆதரவு!!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 10.50 மெட்ரிக் டன் திரவ ஆக்ஸிஜன் அனுப்பப்பட்டுள்ளது.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In