தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் அருகே உள்ள மேல மருதூர் கிராமம் கோஸ்டல் எனர்ஜன் முத்தையரா அனல்மின் நிலையம் சார்பாக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு ரூ.4 லட்சம் மதிப்புள்ள 200 ஆக்சிசன் மீட்டர் வழங்கப்பட்டது. தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி கலையரங்கில் நடந்த நிகழ்ச்சியில், கனிமொழி கருணாநிதி எம்.பி., வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், சமூக நலத்துறை மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், அரசு மருத்துவமனை டீன், வ.உ.சி. கல்லூரி முதல்வர் வீரபாகு, அனல்மின் நிலைய இயக்குனர் எம்.கே. பரமேஸ்வரன், பொது மேலாளர் ஆர். விஜய் ஆறுமுகம், நிர்வாக அலுவலர் ஆர். சண்முகராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

