கொரோனா என்னும் பெரும் நோய்த்தொற்றால் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில் நோய் தொற்று பரவாமல் தடுப்பதற்காகவும் பொதுமக்களின் சிரமத்தை தவிர்க்கும் பொருட்டு கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் வாட்ஸ்அப் மூலம் புகார் தெரிவிக்கும் முறையை அறிமுக படுத்தியுள்ளார்.
பொது மக்கள் அவர்களது புகார்களை 77081 00100 என்ற எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் புகார் மனு அளித்தால் சம்மந்தப்பட்ட நபர்களை மதியம் 12 மணி முதல் 01 மணி வரை வீடியோகால் மூலம் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தங்களது புகார் சம்மந்தமாக குறைகளை கேட்டு நடவடிக்கை மேற்கொள்வார். மேட்டுப்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், பேரூர், கருமத்தம்பட்டி, பொள்ளாச்சி மற்றும் வால்பாறை உட்கோட்ட காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பொதுமக்கள் மேற்கண்ட எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம்.

