காயாமொழியில் மதர் சமூக சேவை நிறுவனம் நடத்திய கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு முகாமில் ஏ.எஸ்.பி.,ஹர்ஷ்சிங் ஐ.பி.ஏஸ்., முககவசம், கபசுர குடிநீர் வழங்கினார்
******************************
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது இதைத் தடுப்பதற்கு தமிழ்நாடு அரசு பல்வேறு நடைபெற்ற எடுத்துவருகிறது. அதேபோல் தூத்துக்குடி மாவட்டத்திலும் கொரோனா பரவல் தீவிரமாக இருந்து வருகிறது இதனை தடுப்பதற்கு கடந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து மதர் சமூக சேவை நிறுவனம் விழிப்புணர்வு மற்றும் பல்வேறு சேவைகளை தொடர்ந்து செய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக காயாமொழி கிராமம் குமாரசாமி புரத்தில் வைத்து நடைபெற்ற கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு முகாமிற்கு மதர் சமூக சேவை நிறுவன இயக்குனர் டாக்டர் எஸ்ஜே கென்னடி தலைமை தாங்கினார் காயாமொழி கிராம நிர்வாக அலுவலர் தனசேகர் மதர் சமூக சேவை நிறுவன சட்ட ஆலோசகர் வக்கீல் போ. ரமேஷ் லீடு டிரஸ்ட் தொண்டு நிறுவன இயக்குனர் பானுமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக திருச்செந்தூர் கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் ஹர்ஷ்சிங் ஐ.பி.எஸ்., கலந்து கொண்டு பேசியதாவது :-
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது விரைவில் கொரோனா மூன்றாவது அலை விரைவில் வரப்போவதாகக் கூறப்படுகிறது. கொரோனாவில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். ஆகவே பொதுமக்கள் அனைவரும் கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தடுப்பூசி போட்டுக் கொண்டால் மட்டுமே தங்களை கொரோனா பாதிப்பில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும் மேலும் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இயற்கை உணவு மற்றும் முளைக்கட்டிய பயிறு வகைகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். ஆடாதோடா கற்பூரவள்ளி துளசி வேப்பிலை வெற்றிலை கிராம்பு மிளகு மஞ்சள் எலுமிச்சை உப்பு இஞ்சி போன்றவைகளை கொதிக்கவைத்து ஆவி பிடிக்க வேண்டும். உடம்பில் ஆக்சிஜன் அளவை அதிகரிக்க யோகா மற்றும் மூச்சுப்பயிற்சி செய்ய வேண்டும் என திருச்செந்தூர் கோட்டை காவல் உதவி கண்காணிப்பாளர் ஹர்ஷ்சிங் ஐ.பி.எஸ்.,கூறினார் மேலும் இதைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு முக கவசம், கபசுர குடிநீர் மற்றும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். இதில் காயாமொழி குமாரசாமி புரம் ஊர் தலைவர் இளங்கோவன், செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் மாதவன், மற்றும் நிர்வாகிகள் பாலன், மாதவன், கலை மாதவன், உதயசூரியன், கண்ணன், முத்துக்குமார், கோபால், மகேஷ், செந்தில், ராஜலிங்கம்= அரிச்சந்திரன், செல்வம், மற்றும் மதர் மகளிர் சுய உதவி குழு நிர்வாகிகள் உறுப்பினர்கள் உழவர் ஆர்வலர் குழு நிர்வாகிகள் உறுப்பினர்கள் உழவர் உற்பத்தியாளர் குழு நிர்வாகிகள் உறுப்பினர்கள் நிகழ்ச்சி ஒருங்கிணைத்தனர். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மதர் சமூக சேவை நிறுவன இயக்குனர் டாக்டர் எஸ் ஜே கென்னடி மற்றும் லீடு டிரஸ்ட் தொண்டு நிறுவன இயக்குனர் எஸ் பானுமதி மேலும் பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்


