ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் தனிப்பிரிவு காவலராக பணிபுரியும் பிரேம் குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு முதியோர் இல்லங்களுக்கு நிவாரணப் பொருட்களை ஒட்டன்சத்திரம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அசோகன் தலைமையில் வழங்கினார்
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் தனிப்பிரிவு காவலராக பணிபுரிந்து வரும் பிரேம் குமார் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு விருப்பாட்சியில் உள்ள துர்கா ஆதரவற்றோர் இல்லம், சத்திரப்பட்டியில் உள்ள காந்தி சேவா ஆதரவற்றோர் இல்லம் மற்றும் கீரனூரில் உள்ள வள்ளலார் குருகுலம் ஆகியவற்றிற்கு அரிசி, பருப்பு, எண்ணெய், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ஒட்டன்சத்திரம் உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் அசோகன் தலைமையில் வழங்கினார்

