தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக ஊரடங்கை முன்னிட்டு எட்டயாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஸ்ரீ சாய் கணேஷ் திருமண மஹாலில் வைத்து சுற்றுவட்டாரப் பகுதியில் வசித்துவரும் ஊர்க்காவல் படையினர், இசைக்கலைஞர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஏழை எளிய மக்கள் என 120 பேருக்கு இன்று அரிசி, பருப்பு, காய்கறிகள் மற்றும் மளிகைப் பொருட்கள் அடங்கிய நிவாரண தொகுப்புகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் வழங்கினார்.*
அப்போது அவர் பேசுகையில் 18 வயதிற்கு மேற்பட்ட பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி கட்டாயம் போட்டுக்கொள்ள வேண்டும், அதே போன்று மூக்கை நன்றாக மூடி முகக் கவசம் அணிய வேண்டும், அதிலும் 2 முகக்கவசம் அணிவது மிகவும் நல்லது, அடிக்கடி கைகளை சோப்பு மற்றும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யவேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும், அரசு அறிவித்துள்ள ஊரடங்கு உத்தரவை தவறாமல் கடைபிடித்து அரசுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து நம்மை நாமே காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் சிறப்புரையாற்றினார்.
இதற்கான ஏற்பாடுகளை விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. பிரகாஷ் உத்தரவின்பேரில், எட்டயபுரம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. ஜின்னா பீர் முகமது தலைமையிலான போலீசார் செய்திருந்தனர்.*
இந்நிகழ்ச்சியில் எட்டயபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் திரு. பொன்ராஜ், திரு. முத்துவிஜயன் உட்பட காவல்துறையினர் மற்றும் கீழ ஈரால் பஞ்சாயத்து தலைவர் திரு. பச்சை பெருமாள், கீழ ஈரால் தங்கப்பாண்டி மிட்டாய் கடை உரிமையாளர் திரு. சரவணன், சீனிவாசன் மிட்டாய் கடை உரிமையாளர் திரு. சீனிச்சாமி ஆகியோர் உடனிருந்தனர்.*


