தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே அடிக்கடி செல்போனில் பேசியதை தாய் கண்டித்தால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகேயுள்ள கொட்டாரம் குறிச்சி கிராமம், செல்வநாயகபுரத்தைச் சேர்ந்தவர் முத்து. இவரது மகள் முத்துசெல்வி (21), அடிக்கடி செல்போனில் பேசிக்கொண்டிருப்பாராம். இதனை அவரது தாயார் பேச்சியம்மாள் கண்டித்துள்ளார். இதனால் மனவேதனையில் முத்துசெல்வி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஏரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொ) லட்சுமி பிரபா வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்

