திருநெல்வேலி மாநகர டவுன் போக்குவரத்து காவல் ஆய்வாளர் அருண் மற்றும் பாளை போக்குவரத்து காவல் ஆய்வாளர் மகேஸ்வரி ஏற்பாட்டில் நெல்லை மாநகர டவுன் மற்றும் பாளை போக்குவரத்து காவலர்கள் மற்றும் காவல் அதிகாரிகள் ஒன்றிணைந்து பேட்டை நரிக்குறவர் காலனியில் வசித்து வரும் சுமார் 700 நபர்களுக்கு 01-06-2021 ம் தேதியன்று, அன்னதானமாக மதிய உணவு பொட்டலங்களை நெல்லை மாநகர காவல் ஆணையாளர் பொறுப்பு பிரவின்குமார் அபிநபு இ.கா.ப அவர்கள் தலைமையில் வழங்கப்பட்டது. உடன் காவல் துணை ஆணையர்கள் மகேஷ் குமார் இ.கா.ப, ஸ்ரீனிவாசன் மற்றும் காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

