• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

சாலை விபத்தில் காலமான முத்தையாபுரம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன் உடலுக்கு மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் மலர்வளையம் வைத்து அஞ்சலி

policeseithitv by policeseithitv
May 31, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
சாலை விபத்தில் காலமான முத்தையாபுரம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன் உடலுக்கு மாவட்ட எஸ்.பி  ஜெயக்குமார் மலர்வளையம் வைத்து அஞ்சலி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி மாவட்டம், முத்தையாபுரம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் தெய்வத்திரு. சுப்பிரமணியன் அவர்கள் சாலை விபத்தில் நேற்று காலமானார். அன்னாரது உடலுக்கு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

முத்தையாபுரம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் தெய்வத்திரு. சுப்பிரமணியன் (54) அவர்கள் சிறப்பு அலுவலாக தூத்துக்குடி நகர காவல்துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணியாற்றி வந்தார். இவர் கடந்த 22.05.2021 அன்று காலை 10 மணியளவில் பணி நிமித்தமான இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது தூத்துக்குடி ஜார்ஜ் ரோடு தஸ்நேவிஸ் பள்ளி அருகில் செல்லும்போது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் படுகாயமடைந்தார். படுகாயமடைந்தவரை உடனடியாக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று (30.05.2021) மதியம் 2 மணியளவில் காலமானார். இது குறித்து தூத்துக்குடி தென்பாகம் காவல் ஆய்வாளர் திரு. ஆனந்தராஜன் அவர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

இவர் 1988ம் ஆண்டு இரண்டாம் நிலைக் காவலராக பணியில் சேர்ந்து பல்வேறு காவல் நிலையங்களில் சிறப்பாக பணியாற்றி, பதவி உயர்வுகள் பெற்றவர். இவருக்கு திருமதி. வெங்கடலெட்சுமி என்ற மனைவியும், திருமதி. துர்காதேவி என்ற மகளும், கல்லூரியில் பி.காம் 3வது ஆண்டு பயின்று வரும் செந்தில் முருகன் என்ற மகனும் உள்ளனர்.

அன்னாரது நல்லடக்கம் அவரது சொந்த ஊரான செக்காரக்குடியில் இன்று (31.05.2021) காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையுடன் 30 குண்டுகள் முழங்க அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

அவரது உடலுக்கு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள், தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் திரு. கணேஷ், தூத்துக்குடி ஊரக காவல் துணை கண்காணிப்பாளர் திரு. பொன்னரசு, விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. பிரகாஷ், முத்தையாபுரம் காவல் ஆய்வாளர் திரு. ஜெயசீலன், ஸ்ரீவைகுண்டம் காவல் ஆய்வாளர் திரு. அன்னராஜ், தூத்துக்குடி ஊரக உட்கோட்ட தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் திரு. நம்பிராஜன் உட்பட காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

Previous Post

குலசேகரபட்டினம் அருகே ரூ.2.30 லட்சம் மதிப்புள்ள புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

Next Post

செங்கல்பட்டு ஒருங்கிணைந்த தடுப்பூசி தயாரிப்பு மையத்தை இயக்குவதற்கு மத்திய அரசின் பதிலை எதிர்நோக்கி காத்திருப்பதாக நெல்லையில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி.

Next Post
செங்கல்பட்டு ஒருங்கிணைந்த தடுப்பூசி தயாரிப்பு மையத்தை இயக்குவதற்கு மத்திய அரசின் பதிலை எதிர்நோக்கி காத்திருப்பதாக நெல்லையில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி.

செங்கல்பட்டு ஒருங்கிணைந்த தடுப்பூசி தயாரிப்பு மையத்தை இயக்குவதற்கு மத்திய அரசின் பதிலை எதிர்நோக்கி காத்திருப்பதாக நெல்லையில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In