தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 1.600 கிலோ கஞ்சாவை விற்பனை செய்வதற்காக வைத்திருந்தவர் கைது – எதிரியை கைது செய்த தனிப்படை போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டு.*
*தூத்துக்குடியில் சட்டவிரோதமாக கஞ்சாவை விற்பனை நடைபெருவதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் உத்தரவின்பேரில் தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் திரு. கணேஷ் மேற்பார்வையில் தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. ஆனந்தராஜன் தலைமையில் உதவி ஆய்வாளர் திரு. வேல்ராஜ், திரு. சிவக்குமார், தலைமை காவலர் திரு. பென்சிங், முதல் நிலை காவலர்கள் திரு. செந்தில்குமார், திரு. மாணிக்கராஜ், திரு. மகாலிங்கம், திரு. சாமுவேல், காவலர் திரு. முத்துப்பாண்டி ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் இன்று (28.05.2021) ரோந்து பணியில் ஈடுபட்ட போது தூத்துக்குடி காமராஜ் கல்லூரி அருகில் தூத்துக்குடி முனியசாமிபுரம் 1வது தெருவைச் சேர்ந்த ஜெயசீலன் மகன் டேனியல்ராஜ் (34) என்பவர் காரில் வைத்து கஞ்சா விற்பனை ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.*
*இதுகுறித்து தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய போலீசார் அவரை கைது செய்து அவரிடமிருந்த 1.600 கிலோ கிராம் கஞ்சாவையும், கஞ்சா விற்பதற்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.*
*மேற்படி எதிரி டேனியல்ராஜ் என்பவர் மீது தூத்துக்குடி தென்பாகம், சூரங்குடி, திருநெல்வேலி நகரம், நீலகிரி மாவட்டம் கோத்தகிரி, ஆகிய காவல் நிலையங்களில் கஞ்சா மற்றும் திருட்டு வழக்குகள் உட்பட 5 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.*
*மேற்படி எதிரியை கைது செய்து கஞ்சாவையும், கஞ்சா விற்பதற்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்த தனிப்படையினரை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டினார்.*

