• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தமிழ்நாட்டின் நிதி பற்றாக்குறை ரூ92,305 கோடி

policeseithitv by policeseithitv
May 28, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
சென்னை – கொல்லம் ரயிலில் ரூ.1.22. கோடி பறிமுதல் – 3 பேர் கைது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
தமிழ்நாட்டின் 2020-21 நிதியாண்டுக்கான நிதி பற்றாக்குறை, 92,305.07 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டின் 2020-21 நிதியாண்டுக்கான நிதி பற்றாக்குறை, அதாவது தமிழக அரசின் வருவாய் மற்றும் செலவுகளுக்கு மத்தியிலான வித்தியாசம் 53,038.61 கோடி ரூபாயில் இருந்து 92,305.07 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது எனக் கம்ப்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் (CAG) அமைப்பின் தனிக்கை செய்யப்படாத தரவுகள் கூறுகிறது. கடந்த நிதியாண்டில் லாக்டவுன், கொரோனா தொற்று மூலம் அதிகளவிலான கட்டுப்பாடுகள் ஆகியவை இருந்த காரணத்தால் தமிழ்நாட்டின் வர்த்தகப் பாதிக்கப்பட்டு அரசின் வருவாய் குறைந்துள்ளது.
இதேவேளையில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தத் தமிழக அரசு அதிகளவிலான செலவுகளைச் செய்ய வேண்டிய கட்டாயம் உருவானது, இதனால் அரசின் செலவுகள் அதிகரித்துள்ளது. கம்ப்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் (CAG) அமைப்பின் தரவுகள் அடிப்படையில் மாநில அரசின் வரி வருவாய் மற்றும் மத்திய அரசின் வரிகள் ஆகியவற்றைச் சேர்த்து தமிழக அரசு 2020-21 நிதியாண்டில் மட்டும் 1,74,255.66 கோடி ரூபாய் அளவிலான வருவாய் பெற்றுள்ளது. இது 2019-20ஆம் நிதியாண்டை அளவீட்டை ஒப்பிடுகையில் 2.80 சதவீதம் குறைவு.
இதே காலகட்டத்தில் தமிழ்நாட்டின் மொத்த செலவுகள் 2,32,320.64 கோடி ரூபாயில் இருந்து 2020-21ஆம் நிதியாண்டில் 2,66,560.73 கோடி ரூபாயா உயர்ந்துள்ளது. ஒருபக்கம் மொத்த வருவாய் அளவுகள் 2.80 சதவீதம் சரிந்துள்ள போது, மொத்த செலவுகளின் அளவு 14.7 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளது. இதனால் தமிழ்நாட்டு அரசின் மொத்த நிதி பற்றாக்குறை அளவு 2019-20 நிதியாண்டில் 53,038.61 கோடி ரூபாய் அளவில் இருந்து 2020-21 நிதியாண்டில் 92,305.07 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
தமிழக அரசின் மொத்த வருவாயில் சுமார் 70 சதவீத வரி வருமானம் State’s own tax revenue பிரிவு மூலம் கிடைக்கிறது. இந்தப் பிரிவின் கீழ் தான் மதுபானம் விற்பனை மூலம் கிடைக்கும் வருமானம், மாநில கலால் வரி, விற்பனை மற்றும் வர்த்தக வரி, மாநில ஜிஎஸ்டி வரி, பத்திர மற்றும் பதிவு கட்டணங்கள் வருகிறது. இப்பிரிவில் 2019-20 நிதியாண்டில் 1,01,211.94 கோடி ரூபாய் அளவிலான வருமானத்தைப் பெற்ற நிலையில், 2020-21 நிதியாண்டில் 1,01,140.09 கோடி ரூபாயாக உயர்ந்தது. இது கடந்த நிதியாண்டை விடவும் 0.07 சதவீதம் மட்டுமே குறைவாகவும்.
மேலும் மாநில கலால் வரியில் 8.5% உயர்வுடன் 7,821.66 கோடி ரூபாயும், விற்பனை மற்றும் வர்த்தக வரிக் கீழ் (பெட்ரோலியம் பொருட்கள், மதுபானம் விற்பனை வரிகள் இதில் அடங்கும்) 2.3% உயர்வுடன் 43,490.05 கோடி ரூபாயும், மாநில ஜிஎஸ்டி வரி 1.12% சரிவுடன் 37,942.08 கோடி ரூபாயும், பத்திர மற்றும் பதிவு கட்டணம் வாயிலாக 7.54% உயர்வுடன் 11,675.11 கோடி ரூபாய் வருவாய் பெற்றுள்ளது.
தேர்தலுக்கு முன்பும் அதிமுக அரசு தாக்கல் செய்த பட்ஜெட் அறிக்கையில் 2020-21 நிதியாண்டில் தமிழ்நாட்டின் மொத்த நிதி பற்றாக்குறை 96,889.97 கோடி ரூபாயாக இருக்கும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தணிக்கைக்குப் பின் உண்மையான அளவீடுகள் திமுக அரசு தாக்கல் செய்யும் பட்ஜெட் அறிக்கையில் தான் தெரிய வரும்.
தமிழ்நாட்டின் கடன் அளவு கடந்த சில வருடங்களாகத் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இந்தக் கடன் சுமையைச் சமாளிக்கும் மிகப்பெரிய பொறுப்பு முக ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசுக்கும், தமிழக நிதியமைச்சர் பிடிஆர் தியாகராஜன் அவர்களுக்கு உள்ளது. இந்நிலையில் கடன் சுமை குறைப்பதற்கான திட்டத்தைப் பட்ஜெட் தாக்கலில் எதிர்பார்க்கலாம்.
Previous Post

காவலர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கான சிறப்பு முகாம் – திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி பிரவீன்குமார் அபிநபு துவக்கி வைத்தார்.

Next Post

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை பகுதிகளைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர்கள், ஏழை எளிய மக்களுக்கு அரிசிப்பை காய்கனிகளை மாவட்ட எஸ்பி எஸ். ஜெயக்குமார் வழங்கினார்.

Next Post
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை பகுதிகளைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர்கள், ஏழை எளிய மக்களுக்கு அரிசிப்பை காய்கனிகளை மாவட்ட எஸ்பி எஸ். ஜெயக்குமார் வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை பகுதிகளைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர்கள், ஏழை எளிய மக்களுக்கு அரிசிப்பை காய்கனிகளை மாவட்ட எஸ்பி எஸ். ஜெயக்குமார் வழங்கினார்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In