தமிழகத்தில் 12ம் வகுப்பு தேர்வு கண்டிப்பாக நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
திருச்சி மரக்கடை அரசு சையது முர்துசா மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர்களுக்கான கரோனா தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்த அவர், 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நிச்சயம் நடத்தப்படும்.12ம் வகுப்பு பொதுத்தேர்வு ஆன்லைனில் நடத்தப்படாது என கூறினார்.
கரோனா பாதிப்பை கருத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை ஆன்லைனில் நடத்தும் திட்டம் உள்ளதா என்றகேள்விக்கு பதிலளித்த அவர், அதற்கான வாய்ப்புகள் இல்லை என திட்டவட்டமாக கூறினார். கரோனா தொற்று பரவலை கருத்தில் கொண்டு உரிய முடிவு எடுக்கப்படும். மாணவர்களின் படிப்பு எவ்வளவு முக்கியமோ அவர்களது உடல்நலமும் அவ்வளவு முக்கியம் என்று தெரிவித்துள்ளார்.

