ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து நேற்று 28.18 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் பல்வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு : உச்சநீதிமன்ற உத்தரவின்படி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையிலுள்ள ஆக்ஸிஜன் அலகு திறக்கப்பட்டு ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் பணி துவங்கியது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு மேற்படி ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தி செயல்பாடு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
நேற்று (24.05.2021) மாலை 6.00 மணி நிலவரப்படி 28.18 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் கீழ்கண்ட மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதில், 7.80 மெட்ரிக் டன் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரிக்கும், 2.50 மெட்ரிக் டன் தர்மபுரி அரசு மருத்துவமனைக்கும், 2.50 மெட்ரிக் டன் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கும், 6.12மெட்ரிக் டன் ராணிபேட்டை, காவேரி கார்போனிக்ஸ், 7.26மெட்ரிக் டன் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கும் 2மெட்ரிக் டன் மதுரை, தோப்பூர் அரசு மருத்துவமனைக்கும் என மொத்தம் 28.18 மெட்ரிக் டன் அனுப்பப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் தெரிவித்துள்ளார்.

