கன்னியாகுமரி மாவட்டம், கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில் முழு ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்கள் தேவயில்லாமல் வெளியே வருவதை தடுக்கவும், ஆங்காங்கே கூட்டம் சேருவதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. வெ. பத்ரிநாராயணன் IPS அவர்கள் மாவட்டத்தில் எல்லா இடங்களுக்குvம் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு வருகிறார். பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
அதோடு நின்றுவிடாமல் காவல்துறை சார்பாக பொது மக்களுக்கு வாகனத்தில் விழிப்புணர்வு செய்ய உத்தரவிட்டார். வடசேரி சந்திப்பில் இந்த பிரசாரத்தை தொடங்கி வைத்து பேசிய அவர் முன்கள பணியாளர்களான காவல் துறையினர் மக்கள் நலன் கருதி தளராமல் இரவு பகலாக பணி செய்து வருகின்றனர். மக்கள் தேவை இல்லாமல் வெளிவருவதை தடுக்க பல நடவடிக்கைகள் எடுத்தாலும், விழிப்புணர்வு பிரசாரம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் போது மக்கள் பெரிது உணர்வார்கள் தேவையில்லாமல் வெளியே வரமாட்டார்கள். என்று கூறினார்.
அதனை தொடர்ந்து நகர்கோவில், கன்னியாகுமரி, குளச்சல், தக்கலை ஆகிய உட்கோட்டத்தில் உள்ள ஒவ்வொரு காவல் நிலையத்தில் உள்ள காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் ஒவ்வொரு இடங்களுக்கும் சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்

