• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி மார்க்கெட்களில் மாநகராட்சி ஆணையர் மற்றும் நகர காவல் துணை கண்காணிப்பாளர் ஆகியோர் ஆய்வு

policeseithitv by policeseithitv
May 18, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி மார்க்கெட்களில் மாநகராட்சி ஆணையர் மற்றும் நகர காவல் துணை கண்காணிப்பாளர் ஆகியோர் ஆய்வு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி மார்க்கெட்களில் மாநகராட்சி ஆணையர் மற்றும் நகர காவல் துணை கண்காணிப்பாளர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

 

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை மிகவும் தீவிரம் அடைந்து வருகிறது. நாளுக்கு நாள் அதன் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இறப்பவர்களின் எண்ணிக்கையும் கூடிக் கொண்டே செல்கிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசின் உத்தரவின் பேரில் ஊரடங்கு புதிய கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டு வருகிறது. காலை 10 மணிக்குள் மார்க்கெட் கடைகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் காலை நேரத்தில் மார்க்கெட் பகுதிகளில் பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதாக புகார் எழுந்துள்ளது.

 

இதனையடுத்து, மாநகராட்சி ஆணையர் சரண்யா அறி, தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர்  கணேஷ், மற்றும் காவலர்கள் இன்று காய்கனி மார்க்கெட்டில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். மார்க்கெட்டில் சமூக இடை வெளியின்றி பொது மக்கள் அதிகமாக  கூடியதால் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். மேலும், முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, மார்க்கெட்டை வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்ய அதிகாரிகள் ஆலோசனை செய்து வருகின்றனர். ஆய்வில் மத்திய பாகம் காவல் ஆய்வாளர் ராமகிருஷ்னன்,  தென்பாகம் காவல் ஆய்வாளர் ஆனந்த ராஜன் மற்றும் காவலர்கள் ஈடுபட்டனர்.

 

 

 

முழு ஊரடங்கு காலத்தில் காய்கனி மற்றும் மளிகை சாமான்கள் விற்பனைக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. மேலும் மார்க்கெட்டில் மொத்த விற்பனை மட்டுமே நடைபெற வேண்டும் என்றும் பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள கடைகளில் மட்டுமே காய்கனி மளிகை சாமான்களை வாங்க வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். காய்கனி மார்க்கெட் பகுதிகளில் அதிக அளவில் மக்கள் கூடுவதால் தூத்துக்குடி காமராஜ் மார்க்கெட்டை புதிய பேருந்து நிலையம் அருகிலும், வஉசி மார்க்கெட் அதன் அருகே உள்ள வெளிப்புறத்திலும் இடமாற்றம் செய்ய அதிகாரிகள் பரிசீலனை செய்து வருகின்றனர்.

Previous Post

நடத்தையில் சந்தேகப்பட்டு இளம்பெண்ணை வெட்டி படுகொலை செய்த கணவரை போலீசார் கைது

Next Post

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கொரோனா தொற்றுக்கு பலி

Next Post
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கொரோனா தொற்றுக்கு பலி

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கொரோனா தொற்றுக்கு பலி

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In