ஸ்ரீவைகுண்டம் தொகுதி மக்களுக்கு கொரானா நோய் வராமல் தடுக்கும்விதத்தில் தடுப்பூசி போடு முகாம்களை மின்னல் வேகத்தில் செய்து வருகிறார் எம்,எல்,ஏ, ஊர்வசி அமிர்தராஜ்
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி மக்களுக்கு கொரானா பாதிப்பு ஏற்ப்படாத வகையில் தடுக்கும் விதத்தில் கருங்குளம், முக்காணி உட்பட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு கொரானா தடுப்பூசிகள் போடும் முகாமினை காங்கிரஸ் எம்எல்ஏ ஊர்வசி அமிர்தராஜ் துவக்கி வைத்தார்,
மேலும் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி மக்களின் நலனை காப்பதே தன் முதல் கடமை என்று கருதி சுகாதாரத் துறை அலுவலர்கள் மூலம் பொதுமக்களின் இல்லங்கள் தேடிச் சென்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு கொரானா விழிப்புணர்வுகளை ஏற்ப்படுத்தி மக்களுக்கு தேவைபடும் மருத்துவ சேவைகளையும் உடனுக்குடன் சுகாதார துறை அலுவலர்கள் செய்ய வேண்டும் என்று மருத்துவ துறை அதிகாரி களுக்கு உரிய ஆலோசனை வழங்கி வருகிறார் காங்கிரஸ் எம்எல்ஏ ஊர்வசி அமிர்தராஜ் என்பது குறிப்பிடத்தக்கது,
இந்நிகழ்ச்சியில் ஏரல் வட்டாட்சியர் இசக்கிராஜ்,, மற்றும் மருத்துவ செவிலியர்கள் உட்பட ஏராளமான காங்கிரஸ் பிரமுகர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்


