16-வது தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தில், முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்டோர் எம்எல்ஏவாக பதவி ஏற்றனர். சென்னை கலைவாணர் அரங்கில், சட்டப்பேரவை கூட்டத்தை தற்காலிக சபாநாயகர் கு.பிச்சாண்டி தொடங்கி வைத்தார். மக்கள் மனதில் இடம்பிடித்த முதலமைச்சர் ஸ்டாலின் என பாராட்டினார். இதையடுத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்று கூறி சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்றார். அதனைத் தொடர்ந்து அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் பதவி ஏற்றனர் தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜ் இன்று பதவி ஏற்றுக்கொண்டார்


