தூத்துக்குடி அருகே குழந்தை இறந்ததால் மனவேதனையில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம் கீழ வல்லநாடு, வேதக்கோவில் தெருவைச் சேர்ந்தவர் தங்கராஜ் மகன் பெருமாள் (22). இவருக்கு திருமணமாகி ஒன்றரை வருடங்களாகிறது. இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் இவரது மனைவிக்கு குழந்தை பிறந்து இறந்து விட்டது. இதனால் மனவேதனையில் இருந்து வந்த பெருமாள், நேற்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து முறப்பநாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) விமலா வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

